search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ"

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது :- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை வலுவாக வழிநடத்தியது போல அதை விட 4 மடங்கு மக்களை கவர்ந்து எளிமையின் அடையாளமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த கூட்டத்தின் நோக்கம் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு 200 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இதில் மகளிர் சுயக்உதவிகுழுவில் இருந்து 25 பேரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு 25 பேரும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு உள்பட ஒரு பூத்திற்கு 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன. இந்த பணிகளை வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் 1 மாத காலம் முழுமையாக, விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டிபாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், சுப்பு, பாலசுப்பிரமணியம், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், 15 வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கனகராஜ், விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் 50ம் ஆண்டு பொன் விழா மக்கள் விழாவாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 36 மற்றும் 55 வது வார்டுகளுக்குட்பட்ட சின்னான் நகர், பெரிச்சிபாளையம் அன்னமார் காலனி பகுதிகளில் அ.தி.மு.க. 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு டேபிள் சேர் உள்ளிட்ட நல உதவிகளை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், கருணாகரன், கட்சி நிர்வாகிகள் தம்பி மனோகரன், ஆண்டவர் பழனிசாமி,  கே.பி.ஜி.மகேஷ்ராம், ராஜகோபால், கந்தவேல்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசுகையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் 50-ம் ஆண்டு பொன் விழா மக்கள் விழாவாக கொண்டாடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் தோற்றாலும் மக்கள் நலனில் அக்கறை எடுத்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக கூறி 6 மாதமாகியும் தி.மு.க. அரசு இதுவரையில் நிறைவேற்றவில்லை. ஆகவே, தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அனைவரும் சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
    ×